tamilni 238 scaled
உலகம்செய்திகள்

மகளை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி

Share

மகளை நாட்டின் முதல் பெண்மணியாக அறிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி (Asif Ali Zardari) முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முதல் பெண்மணி பதவியை அவரது 31 வயது மகள் அசீபா பூட்டோவுக்கு (Aseefa Bhutto Zardari) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

முதல் பெண்மணி என்ற பட்டம் பொதுவாக நாட்டின் அதிபரின் மனைவிக்கு தான் செல்லும். ஆனால், சர்தாரியின் மனைவி உயிருடன் இல்லை.

அவரது மனைவியும், முன்னாள் பிரதமருமான பெனாசிர் பூட்டோ (Benazir Bhutto) 2007ல் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகவே வாழ்ந்தார்.

2008-2013க்கு இடையில், அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் முதல் பெண்மணி பதவி காலியாகவே இருந்தது.

ஆனால் இம்முறை சர்தாரி தனது இளைய மகள் ஆசிஃபா பூட்டோவை முதல் பெண்மணியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் பின்னணியில், ஜனாதிபதியின் மூத்த மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி, ஆசிஃபாவை முதல் பெண்மணியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட பதிவு தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

பாகிஸ்தானின் முதல் பெண்மணி ஆசிஃபா, நீதிமன்ற விசாரணைகள் மற்றும் சட்டப் போராட்டம் முதல் ஜனாதிபதி பதவியேற்பு வரை அனைத்து நேரங்களிலும் சர்தாரிக்கு ஆதரவாக நின்றதாக அவர் கூறினார்.

இந்தப் பதிவின் மூலம் பாகிஸ்தான் முதல் பெண்மணி அந்தஸ்தை ஆசிப் ஏற்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

பாகிஸ்தானின் 14வது ஜனாதிபதியாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி பதவியேற்றுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சர்தாரி வெற்றி பெற்றார். அவர் PPP மற்றும் PML-N ஆதரவுடன் போட்டியிட்டு சன்னி இத்தேஹாத் கவுன்சில் வேட்பாளர் மஹ்மூத் கான் அச்சக்சாயை தோற்கடித்தார்.

இந்தத் தேர்தலில் சர்தாரி 255 வாக்குகளும், மஹ்மூத் 119 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் பாகிஸ்தானின் அடுத்த ஜனாதிபதியாக சர்தாரி பதவியேற்றார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

 

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...