tamilnid 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி

Share

இலங்கை அரசாங்கம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற சில மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவயைின் 55 ஆம் அமர்வுகளில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்த மெய்யான தகவல்களை வெளிப்படுத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்களுக்காக நீதி வேண்டி குரல் கொடுக்கும் தரப்புக்கள் சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கர்தினால், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 6
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி:  தாழமுக்கம் உருவாக வாய்ப்பு 

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதியளவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...

national hospital
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சாதனை: குறுகிய காலத்தில் நடமாட வைக்கும் முழங்கால் மாற்றுச் சத்திரசிகிச்சை – தாய்லாந்து நிபுணர்கள் உதவி!

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதைக் குறிக்கும் வகையில், கண்டி...

images 4 7
உலகம்இலங்கை

பிரித்தானியாவை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை முந்தைய தரவுகளை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிரித்தானியர்களின் எண்ணிக்கை முன்னதாக அறிவிக்கப்பட்ட தரவுகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்...

5dbc2f30 18e7 11ee 8228 794cf17b91f4.jpg
செய்திகள்உலகம்

தமிழகத்தில் அதிர்ச்சி: தாயைத் தாக்கி இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய வழக்கில் 5 பேர் கைது!

இரண்டரை வயதுக் குழந்தையைக் கடத்திய குற்றச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்...