tamilni 183 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

Share

நைஜீரியாவில் 300 பள்ளி குழந்தைகள் கடத்தல்! தப்பிய 28 பேர்: மீதமுள்ளவர்கள் மீட்கப்படுவார்களா?

நைஜீரியாவின் வடமேற்கு மாநிலமான கடூனாவில், ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட கிட்டத்தட்ட 300 பள்ளி குழந்தைகளில் குறைந்தது 28 பேர் தப்பி ஓடி விட்டதாக அந்த மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கடூனா மாநிலத்தின் Kuriga நகரில் நடந்த தாக்குதலில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட அரசு ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் குழந்தைகள் இலக்கு வைக்கப்பட்டது.

கடத்தப்பட்ட குழந்தைகளின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை, 300 க்கு நெருக்கமான எண்ணிக்கையைக் குறிக்கும் அறிக்கைகள் உள்ளன.

இந்த சம்பவத்தின் போது சில குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தப்பியோடினர். அதில் தற்போது குறைந்தது 28 குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த 28 குழந்தைகள் தப்பி ஓடியது, கடத்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்புவதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

நைஜீரியாவின் கடூனா மாநில கவர்னர் உபா சானி, கடத்தப்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டுவதற்காக அதிகாரிகள் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வருவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேலைகளுக்கு நைஜீரிய ராணுவம் தலைமை தாங்கி வருகிறது.

நைஜீரியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களுக்கு இந்த கடத்தல் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

 

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...