12 2 scaled
உலகம்செய்திகள்

சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

Share

சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏடன் வளைகுடாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் சரக்கு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதோடு மூவர் கொள்ளப்பட்டுள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அதில் இருந்த 21 பணியாளர்களை இந்திய போரக்கப்பலான ஐஎன்ஏஎஸ் கொல்கத்தா மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, மீட்கப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவர் ஏவுகணை தாக்குதலால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 6 ஆம் திகதியன்று பார்படோஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த சரக்கு கப்பல், ஏடனுக்கு தென்மேற்கே 55 கடல் மைல் தொலைவில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியதாகவும் பல பணியாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைவில் சென்ற இந்திய கடற்படையினர், உலங்கு வானூர்தி மற்றும் படகுகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் காயமடைந்த பணியாளர்களுக்கு கப்பலின் மருத்துவக் குழு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...