20 1 scaled
இலங்கைசெய்திகள்

ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி!

Share

ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி!

ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தில் நேற்று(04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாடு டிஜிட்டல் மயமாக்கப்படும் என கூறினாலும், ஒரு கணினியைக் கூட வழங்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

எனினும் ஊழலில் ஈடுபடுவதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் இடம்பெற்ற திருட்டுகளை மையமாக வைத்து ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த போது அந்த திருடனை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் 113 பேர் ஒன்றுணைந்தனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களை போன்றவர்கள்தான் என எண்ணுவது பிழையான நிலைப்பாடு ஆனால் ஊழல் வாதியை பாதுகாக்க 113 பேர் முன்நின்றது உண்மையே.

மேலும் நாட்டிலுள்ள கல்வி முறையில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடாது.இலவசக் கல்வியை வலுப்படுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...