tamilnaadi 20 scaled
இலங்கைசெய்திகள்

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சி

Share

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சி

கேகாலை, கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித் குமார் சூரியஆராச்சி என்ற இளைஞனே இந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

நாங்கள் குடும்பமாக ஸ்ரீ பாத சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு உணவு சாப்பிட இடம் தேடினோம்.

அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கிவிட்டது. கித்துல்கல வீதியில் ஏதோ துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

எனினும் அதற்கு மேல் வாகனத்தை ஓட்டி வந்துக் கொண்டிருந்த போது திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வானை நிறுத்தி பரிசோதித்த போது ஒரு கைக் குழந்தை ஒன்று உயிருடன் இருந்தது.

எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை எப்படி இந்த வழியில் விழுந்தது என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வீதியோரம் காடு. மிருகத்திடம் சிக்கியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழந்தையை கித்துல்கல பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

எனினும் பின்னர் தான் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கைகளில் இருந்து குழந்தை வீதியில் விழுந்தமை தெரிய வந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...