tamilni 13 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்!

Share

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது சாந்தனின் உடல்!

கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ள சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு, ஒழுங்குகள் செய்யப்பட்டதன் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என சாந்தன் குடும்பத்தார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சாந்தனின் உடலைப் பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சாந்தனின் மைத்துனர் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்தநிலையில், சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவரது குடும்பத்தார் லங்காசிறிக்கு வழங்கிய தகவலில்,

யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக நாளைய தினம் சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டு, நாளை மறுதினம் சாந்தனின் தாயாரின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கிரியைகள் நடத்தப்படும்.

மேலும், அங்கு பொது அமைப்புக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோரின் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்படும்.

அதன் பின்னர் தகனக் கிரியைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

Share
தொடர்புடையது
Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...

Untitled 15
உலகம்செய்திகள்

வெள்ளை மாளிகை நடன மண்டபக் கட்டுமானத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தடை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் முன்னெடுத்து வரும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான...

Untitled 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதீத வெப்பம் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்: மனநல நிபுணர் டாக்டர் விந்தியா விஜயபண்டாரா விளக்கம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பமான காலநிலை, மக்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி மனநலத்தையும்...

Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...