14 scaled
இலங்கைசெய்திகள்

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

Share

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு பாணந்துறை பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி அதே பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருடன் (தற்போது உயிரிழந்து விட்டார்) இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய வத்தளை, பாணந்துறை, கொழும்பு, மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லவதற்காக 12,13,15, 25 இலட்சம் ரூபாவை வழங்கியதாக பாணந்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த நான்கு முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதே வருடத்தின் பிற்பகுதியில் கனடாவுக்கு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், மாலம்பே பகுதியில் வைத்து எஃபே (27) என்பவரை இரவு வேளையில் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இவ்வாறு வேலை வழங்குவதாகக் கூறி வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்தாரா என்பதை அறிய நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
26 696cda61cd108
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி-க்களின் ஓய்வூதிய ரத்து: உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு; இரகசியத் தீர்ப்பு சபாநாயகருக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய...

articles2Fr9PnSL7cktbisfxCs5bm
செய்திகள்உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகியது அமெரிக்கா! நிதி நெருக்கடியில் WHO!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உலக...

Mweb Maldives 630x375 1
செய்திகள்உலகம்

மாலைத்தீவு நாட்டினருக்கு நற்செய்தி: இலங்கைக்கு வர 90 நாள் விசா விலக்கு அளிப்பு!

வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு குடிமக்களுக்கு 90 நாள் வருகை விசா...