14 scaled
இலங்கைசெய்திகள்

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

Share

கனடா அனுப்புவதாக பண மோசடி செய்த பெண்

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை பாணந்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபர் 2016 ஆம் ஆண்டு பாணந்துறை பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றை நடத்தி அதே பகுதியில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவருடன் (தற்போது உயிரிழந்து விட்டார்) இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களின் மோசடியில் சிக்கிய வத்தளை, பாணந்துறை, கொழும்பு, மாத்தறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்லவதற்காக 12,13,15, 25 இலட்சம் ரூபாவை வழங்கியதாக பாணந்துறை பிரிவின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த நான்கு முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அதே வருடத்தின் பிற்பகுதியில் கனடாவுக்கு தப்பிச் சென்ற சந்தேகநபர், இம்மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், மாலம்பே பகுதியில் வைத்து எஃபே (27) என்பவரை இரவு வேளையில் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பயணத்தடையும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இவ்வாறு வேலை வழங்குவதாகக் கூறி வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்தாரா என்பதை அறிய நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...