tamilni 569 scaled
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

Share

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 22-ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடருக்கான போட்டி அட்டவணையை அண்மையில் வௌளியானதுக்கமைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சிவம் தூபேவிற்கு ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குணமடைய சில மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் அவர் இவ்வருட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பாரா என்று சந்தேகமாக உள்ளது.

இந்நிலையில் ஷிவம் தூபேவை தொடர்ந்து மேலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ரி20 தொடரில் விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் அவர்கள் இருவருமே காயமடைந்துள்ளதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...