tamilnih 37 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

Share

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணிலுடன் ஆலோசனை நடத்த பசில் வருகை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசனையொன்றை நடத்த பசில் ராஜபக்‌ச இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுண கட்சியை உருவாக்கிய பசில் ராஜபக்‌ச, கடந்த டிசம்பர் தொடக்கம் அரசியல் செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளை ஒதுக்கிச் செயற்படும் நாமல் ராஜபக்‌சவின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிளவுகள் தொடர்பில் பசில் நேரடியாக தலையிட்டு தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

அதனையேற்று நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்‌ச, எதிர்வரும் இரண்டொரு வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேரடிக் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...