tamilni 489 scaled
உலகம்செய்திகள்

ஒரு நகரம் மொத்தம் துர்வாடையால் முகம் சுளிக்க வைத்த கப்பல்

Share

தென்னாப்பிரிக்க தலைநகரில் மக்களை மொத்தமாக முகம் சுளிக்க வைத்த கப்பலானது இறுதியில் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து 19,000 பசு மாடுகளுடன் புறப்பட்ட Al Kuwait என்ற கப்பலானது ஞாயிறன்று கேப் டவுன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அந்த கப்பலில் பசு மாடுகளுக்கான தீவனங்களை ஏற்றும் வகையிலேயே கேப் டவுன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதனையடுத்து NSPCA அமைப்பானது தொடர்புடைய கப்பலை ஆய்வுக்கு உட்படுத்தியது.

இதில் மலம் மற்றும் சிறுநீரின் தீவிர பாதிப்பு உட்பட, வெறுக்கத்தக்க நிலைமையில் கப்பல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த கப்பலில் பசு மாடுகள் ஏற்றப்பட்டு 2 வாரங்களுக்கு மேலானதாகவும், வேறு வழியின்றி, அதன் கழிவுகளின் மீதே ஓய்வெடுக்கும் நிலைக்கு அவைகள் தள்ளப்பட்டுள்ளதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் காயங்கள் காரணமாக 8 மாடுகள் கொல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சில மாடுகள் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கப்பல் ஈராக் நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...