tamilni 462 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை

Share

இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாவுக்கு எதிராகவும், இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை விமான நிலையங்களை வழங்குவதற்கும் தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இலங்கையை இந்தியமயமாக்கக் கூடாது என்று அரசாங்க எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.

நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும், இலங்கை படிப்படியாக இந்தியமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுமானால் அதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது இலங்கை இந்தியாவின் 29வது மாநிலமாக மாறுவதையோ நாங்கள் எதிர்க்கிறோம்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களுக்கு விமான நிலையங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். விமான நிலையம், நாட்டிற்குள் நுழையும் உணர்வுபூர்வமான இடமாகும்.நாட்டின் விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்றினால் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்,” என்றார்.

இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ETCA) இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்று கூறிய எம்.பி., இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

“இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது என்றால் நாங்கள் எதிர்க்கிறோம். இதன் மூலம் இந்தியர்கள் வேலை வாய்ப்புக்காக நாட்டிற்குள் நுழைய முடியும். இந்தியாவில் 44 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 200,000 மருத்துவர்கள் இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 1.5 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள், 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியர்களை இலங்கையில் வேலை தேட அனுமதிப்பது இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்,” என்றார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...