tamilni 463 scaled
ஏனையவை

வடமாகாணத்தில் மீண்டுமொரு யுத்தம்!

Share

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், வடமாகாண காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க அவரது வாக்குறுதியை நிறைவேற்றினால், இலங்கைக்கு எதிரான பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நாடுகள், பிரிவினைவாத அமைப்புக்கோ அல்லது வடக்கு காவல்துறையினருக்கோ எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக ஆதரவளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மாகாண சபைகளிடமிருந்து காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் சட்டமூலத்தை உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இலங்கையின் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்த தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...