tamilnid 12 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

Share

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும் அணுசக்தி நிபுணர் ஹலீல் அவ்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகளின் சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.

அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்கும் முன் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஒரு நாட்டில் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன என்றும், அதில் முதலாவது உறுதியான சட்டப் பின்னணியை ஏற்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்க வேண்டுமா? அல்லது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக அணுசக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை,ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமையின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...