tamilnid 12 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

Share

இலங்கையின் அணுசக்தி உற்பத்தி திட்டம் குறித்து அறிவுரை

அணுசக்தி உற்பத்தி திட்டத்தை இலங்கை ஏற்க வேண்டுமானால், முதலில் அந்த நாடு உறுதியான சட்டக் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆலோசகர் மற்றும் அணுசக்தி நிபுணர் ஹலீல் அவ்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகளின் சிறப்பு நிகழ்வில் உரையாற்றும் போது இதனை கூறியுள்ளார்.

அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்கும் முன் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும்போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஒரு நாட்டில் அணுசக்தி திட்டத்தை மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன என்றும், அதில் முதலாவது உறுதியான சட்டப் பின்னணியை ஏற்படுத்துவது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஒரு நாடு அணுசக்தி உற்பத்தி திட்டங்களை ஏற்க வேண்டுமா? அல்லது பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமா என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக அணுசக்தி உற்பத்தி தொடர்பில் இலங்கை,ரஷ்யாவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தமையின் மத்தியிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake
இலங்கை

தூர நோக்குடன் வரவு செலவு திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு.

  அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத்...

yositha
இலங்கை

யோஷிதவை வசமாக சிக்க வைத்த முன்னாள் காதலி!

மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...