tamilni 408 scaled
இந்தியாசெய்திகள்

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

Share

28 கிலோ தங்கம், வைரம், 800 கிலோ வெள்ளி: தமிழ்நாடு வரும் ஜெயலலிதாவின் நகைகள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி நகைகள் பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு வருகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்குகளில் ஒன்றில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் பெங்களூரில் உள்ள தனியார் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 28 கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 800 கிலோ வெள்ளி நகைகள் பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நகைகள் 6 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்புடன் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன.

தமிழக உள்துறை முதன்மை செயலாளர் மார்ச் 6 மற்றும் 7ம் திகதிகளில் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கில், கர்நாடகாவுக்கு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...

25 67b4e515720bd
இலங்கைஅரசியல்செய்திகள்

இனவாத அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிந்தது அரசாங்கம் – அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்! – எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றும் விவகாரத்தில் அரசாங்கம் பின்வாங்கியதைக் கண்டித்து, இலங்கைத்...

images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...