tamilni 389 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திருமணமாகி 90 நாட்களில் உயிரிழந்த இளம் கணவன்

Share

கொழும்பில் திருமணமாகி 90 நாட்களில் உயிரிழந்த இளம் கணவன்

கொழும்பின் புறநகர் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ – பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

டிப் சுவிட்ச் செயலிழந்த மின் விநியோகத்தில் இருந்து பாதுகாப்பற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஷ்க விஜயதுங்க என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...