tamilnaadi 99 scaled
உலகம்செய்திகள்

நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள்

Share

நிறைவேறும் பாபா வங்காவின் கணிப்புகள்

2024இல் நடக்கலாம் என பாபா வங்கா கணித்துள்ள சில விடயங்கள் நிறைவேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இந்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும், புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது நிறைவேறி வருவதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பல்கேரியா நாட்டவரான கண்பார்வையை இழந்த பாபா வங்கா எதிர்காலம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கணித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல், இளவரசி டயானாவின் கோர விபத்து, ரஷ்ய அணு உலை பேரழிவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என அவர் கணித்துள்ளதாக கூறப்படும் விடயங்கள் நிறைவேறியுள்ளன.

இவ்வாறான சூழலில் இந்த ஆண்டிற்கான கணிப்பில் புற்றுநோய் தடுப்பூசி மற்றும் முதன்மையான இரு நாடுகளின் பொருளாதார நெருக்கடி குறித்து பாபா வங்கா கணித்திருந்த நிலையில் அந்த கணிப்புகள் நிறைவேறியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி புற்றுநோய் தடுப்பூசி ஒன்றை ரஷ்யா உருவாக்கியுள்ளதாகவும், அது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் அறிவித்திருந்தார்.

அது மிக விரைவில் நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் இவ்வாண்டு உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்ற பாபா வங்காவின் கணிப்பை உறுதி செய்யும் வகையில், பிரித்தானியா பொருளாதார சிக்கலை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதே நெருக்கடியை தற்போது ஜப்பானும் எதிர்கொண்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவிகிதம் குறைந்துள்ளது.

மட்டுமின்றி, ஜப்பான் கடந்த ஆண்டு ஜேர்மனியை விட பொருளாதாரத்தில் சரிவை எதிர்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றது.

இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாபா வங்காவின் இவ்வாண்டுக்கான கணிப்புகள் சில நிறைவேறி வருவதாக கூறப்படுகிறது.

எனினும் பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி, ஐரோப்பாவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதுடன், இந்த ஆண்டில் இயற்கை பேரிடர் தொடர்பிலும் பாபா வங்கா கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்த போதிலும் இவ்வாண்டு இறுதியிலேயே கணிப்புகள் நிறைவேறியதா இல்லையா என்பதை கூற முடியும்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...