9 1 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தம்பதியர்: வீடு சென்று சேரும் முன் நிகழ்ந்த பரிதாபம்

Share

அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தம்பதியர்: வீடு சென்று சேரும் முன் நிகழ்ந்த பரிதாபம்

வயது முதிர்ந்த ஒரு தம்பதி, அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில், வீடு திரும்பும் முன் விமான நிலையத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அந்த கணவர்.

திங்கட்கிழமையன்று, ஒரு கணவரும் மனைவியும் அமெரிக்காவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் இந்தியா வந்துள்ளனர்.

இருவரும் வயது முதிர்ந்தவர்கள். ஆகவே, சக்கர நாற்காலி வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவும் செய்துள்ளார்கள். ஆனால், மும்பை விமான நிலையத்தில் போதுமான சக்கர நாற்காலிகள் இல்லாததால், ஒரு சக்கர நாற்காலி மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த சக்கர நாற்காலியை மனைவிக்குக் கொடுத்த கணவர், மனைவியின் பின்னாலேயே நடந்துவந்துள்ளார். அவருக்கு வயது 80. சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் நடந்த அவர், திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.

ஆம், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆக, வீட்டுக்குக் கூட செல்லாமல் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் அந்த நபர், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து விட்டு, வீட்டுக்குக் கூட செல்லாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்த மக்கள், சக்கர நாற்காலி இல்லையென்றால் என்ன, பேட்டரியில் இயங்கும் பயணிகளுக்கான வாகனங்கள் உள்ளனவே, அவற்றில் 10 பேர் கூட பயணிக்கலாமே. விமான நிறுவனம் ஏன் அவற்றிற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று கேட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...