tamilni 322 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மூன்று புதிய சர்வதேச பல்கலைக்கழகங்கள்

Share

இலங்கையில் மூன்று புதிய சர்வதேச பல்கலைக்கழகங்கள்

இலங்கைக்குள் மூன்று சர்வதேசப் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இவற்றில் இரண்டு பல்கலைக்கழகங்கள் தற்போது ஸ்தாபிப்பு கட்டத்தில் உள்ள நிலையில் மூன்றாவது பல்கலைக்கழகம் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கண்டியில் திறக்கப்பட உள்ளதோடு மற்ற இரண்டு பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்த கிளைகளைக் கொண்டவையாகும்.

இந்தநிலையில் அரச பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்களை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அவுஸ்திரேலிய உயர்கல்வி அமைச்சர் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மெல்பேர்ன், சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் 10 பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் கல்வி நிலைமையை அவதானித்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவார்கள் எனவும் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...