tamilni 271 scaled
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

Share

ஜே.வி.பிக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கிய இந்தியா: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க அண்மையில் இந்தியா விஜயம் செய்திருந்த போது 300 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மிஹிந்தலை ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி வலஹங்குவே தம்மரதன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

300 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணம் ஜே.வி.பிக்கு கிடைத்துள்ளதாக தமக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

89-90ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரை கூட கொண்டுவரக் கூடாது என ஜே.வி.பி. இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை பின்பற்றியது என என தெரிவித்துள்ளார்.

துறைமுகம், விமான நிலையம், வங்கிகள், மின்சாரசபை, காப்புறுதி நிறுவனங்கள், வங்கிகள் என அனைத்தையும் இந்தியாவிற்கு வழங்க தீர்மானிக்க்பபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உள்நாட்டு சொத்துக்கள் விற்பனை செய்வதனை எதிர்த்த ஜே.வி.வி. தற்பொழுது விலை மனுக் கோரி விற்பனை செய்யுமாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரகுப் பணத்திற்காக ஜே.வி.பி இவ்வாறு செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் கஸ்டங்களை கண்டு கொள்ளாத அரசாங்கத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை என மிஹிந்தலை விஹாராதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...