tamilnid 1 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

Share

வெளிநாடுகளில் உள்ள ஆபத்தான இலங்கையர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பாதாள உலக குழுக்களை இலங்கைக்கு அழைத்த வர நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கமைய, அவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைக்கான தூதரகங்களைச் செயற்படுத்தும் வகையில், அந்தத் தூதரகங்களில் குற்றவியல் அதிகாரிகளை பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வரும் தூதரகங்களை செயற்படுத்துவதற்காக குற்றவியல் சட்டத்தை அறிந்த அதிகாரிகளை தூதரகங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் குற்றவியல் சட்டம் பற்றிய அறிவு இல்லாத இராணுவ அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டத்தை அறிந்த அதிகாரிகளை இதற்காக நியமிக்க முடியுமானால், வெளிநாடுகளின் பொலிஸார், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த துறைகளுடன் இணைந்து குற்றவாளிகளை இலங்கைக்கு நாடு கடத்த முடியும் என பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதாள உலகக் குற்றவாளியை எப்படி நாடு கடத்துவது, நாடு கடத்தல் கோரிக்கைகளை அனுப்புவது எப்படி என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்குத் தெரியாது.

குறைந்தபட்சம் டுபாய், இந்தியா போன்ற பாதாள உலகச் செயல்கள் அதிகம் உள்ள நாடுகளில், குற்றவியல் சட்டத்தைப் புரிந்து கொண்டு நாடு கடத்தும் அதிகாரிகளை ஈடுபடுத்தி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...