tamilnid scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

Share

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடை பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை.

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது. ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு 100ஆக இருந்தது தற்போது 202 ஆக இருக்கின்றது.

அதாவது, 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும். ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை. கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

அவர்களுக்கான வேலை நாட்கள் இப்போது இல்லை. இப்போது நாங்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றோம். மக்களுடைய வருமானத்தில் வரி ஈட்டுவது சாத்தியப்படாது. செல்வந்தர்களின் சொத்தில் இருந்து வரியை எடுத்தால் தான் நாங்கள் நாட்டுக்கான முதலீடுகள் அனைத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...