tamilnid scaled
இலங்கைசெய்திகள்

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

Share

இரு மடங்காக அதிகரித்த 100 ரூபாவின் பெறுமதி

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடை பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை.

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது. ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டு 100ஆக இருந்தது தற்போது 202 ஆக இருக்கின்றது.

அதாவது, 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும். ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை. கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

அவர்களுக்கான வேலை நாட்கள் இப்போது இல்லை. இப்போது நாங்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்றோம். மக்களுடைய வருமானத்தில் வரி ஈட்டுவது சாத்தியப்படாது. செல்வந்தர்களின் சொத்தில் இருந்து வரியை எடுத்தால் தான் நாங்கள் நாட்டுக்கான முதலீடுகள் அனைத்தையும் செய்யக் கூடியதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...

world 203
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பம்பரக்கலையில் பயங்கர தீ விபத்து: 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை (Pambarakelle) PWD லயன் குடியிருப்பு பகுதியில்...

world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...