tamilni 175 scaled
இலங்கைசெய்திகள்

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Share

புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

புத்தளம் – ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையில் தனிப்பட்ட பிணக்கு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக ஆனமடுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...