8 scaled
உலகம்செய்திகள்

தேர்தலுக்கு முந்தைய நாள்… 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு

Share

தேர்தலுக்கு முந்தைய நாள்… 24 பேர்களை பலிவாங்கிய இரட்டை குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் வியாழக்கிழமை பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் இருவரது அலுவலகங்களுக்கு அருகாமையில் வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்தது 24 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம், தேர்தல் நாளில் பாதுகாப்பு தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீப மாதங்களில் தீவிரவாத தாக்குதல், கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நாட்டின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் அடைப்பு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் வியாழக்கிழமை பொதுத்தேர்தலை எதிகொள்ள இருக்கிறது.

இந்த நிலையில், இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்துள்ளதை அடுத்து பாதுகாப்பை பலப்படுத்துவோம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pishin மாவட்டத்தில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 14 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாவது தாக்குதலானது ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள Qilla Saifullah பகுதியில் நடந்துள்ளது.

இதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னனியில் இருப்பவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...