tamilni 117 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

Share

இலங்கையில் பயன்பாட்டிற்கு வரும் Door To Door விநியோக முறை

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இலங்கையில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை அனுப்ப பயன்படுத்தும் Door to Door விநியோக முறையை சுங்கத்துறை இடைநிறுத்திய நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த Door to door விநியோக முறையின் கீழ் பொருட்களை இறக்குமதி செய்வதை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் வெளியீடு இடைநிறுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பாதுகாப்பு, உரிமையாளர்களை அடையாளம் காண்பதில் உள்ள சிரமம் மற்றும் சட்டவிரோத பொருட்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை இடைநிறுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் நாட்டிலுள்ள அவர்களது உறவினர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் இந்த சேவையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...