கோட்டாபயவின் செயலாளர் பதவி விலகினார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நிமல் லான்சா ஆரம்பித்துள்ள புதிய கூட்டணியில் சுகீஸ்வர பண்டார இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments are closed.