3 7 scaled
உலகம்செய்திகள்

இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும்: மாலத்தீவு எதிர்கட்சி தலைவர்

Share

இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும்: மாலத்தீவு எதிர்கட்சி தலைவர்

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக சமூக ஊடகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டார்.

இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் சிலர் இதனை எதிர்த்து விமர்சித்தனர், இது இந்தியா-மாலத்தீவு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு அரசியல் நெருக்கடி அதிகரித்து வருகிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு “இந்தியாவை வெளியேற்றுவோம்(india out) என்ற முழக்கத்தை முன் வைத்து தேர்தலில் வெற்றி பெற்று இருந்தார்.

அத்தோடு ஆட்சிக்கு வந்ததும் அதிபர் முகமது முய்ஸு, இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற வேண்டும் அரசு கெடுவையும் விதித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி அதிபர் முகமது முய்ஸு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர உள்ளனர்.

இந்நிலையில் மாலத்தீவின் மற்றொரு எதிர்கட்சியான மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம் இந்திய பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

அத்துடன் எந்தவொரு நாட்டை பற்றியும், குறிப்பாக அண்டை நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் வகையிலும் நாம் பேசக்கூடாது.

அதேசமயம் நமது நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என  எதிர்கட்சியான மாலத்தீவு ஜும்ஹூரி கட்சியின் தலைவர் காசிம் இப்ராஹிம் குறிப்பிட்டிருக்கிறார்.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...