tamilni 501 scaled
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

Share

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (30.01.2024) கடுவெல நீதவான் நீதிமன்றில் மூவரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்திற்கு பின் இது தொடர்பான முறைப்பாடு பொலிஸில் அளிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான நீதவான் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
18 4
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு நெருக்கடி: ₹11.9 லட்சம் கோடி வரியைத் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கடந்த ஆண்டு சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச்...

17 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதல்: சவுதி மற்றும் ஓமன் விமான நிலையங்களில் 131 இலங்கையர்கள் தவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக சவுதி...

16 4
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு சேவையில் 15,839 புதிய நியமனங்கள்: அமைச்சரவை அதிரடி அனுமதி!

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில்,...

15 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர்: சர்வதேச கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...