tamilni 477 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

Share

49 வயது பெண்ணை திருமணம் செய்த 103 வயது சுதந்திர போராட்ட வீரர்

103 வயது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் தனது வயதில் பாதிக்கு குறைவான பெண்ணை மணந்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

தனிமையை தாங்க முடியாமல் 49 வயதான Firoz Jahan என்பவரை திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறினார்.

ஆனால் அந்த முதியவருக்கு இது மூன்றாவது திருமணம். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

போபாலின் இத்வாரா பகுதியைச் சேர்ந்த 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசர் (Habib Nazar), 49 வயதான ஃபிரோஸ் ஜஹானை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இது நாசரின் மூன்றாவது திருமணம். இரண்டாவது மனைவி இறந்த பிறகு, தனியாக இருந்த அவர், மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஃபிரோஸ் ஜஹானை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார், அனால் இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜனவரியில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், ஃபிரோஸ் ஜஹானுடன் நாசரின் நிக்காஹ் வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஹபீப் நாசரின் முதல் திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்தது. முதல் மனைவி இறந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மூன்றாவது திருமணம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.

49 வயதான ஃபிரோஸ் ஜஹானுக்கு இது இரண்டாவது திருமணமாகும். கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்துள்ளார்.

மறுபுறம், 103 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ஹபீப் நாசரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் அவரை திருமணம் செய்து கொண்டதாக ஃபிரோஸ் ஜஹான் தெரிவித்தார்.

கணவர் நாசர் நலமுடன் இருப்பதாகவும், எந்த வித மருத்துவ பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தன்னை யாரும் நாசரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...