23 64895d81a9abf
உலகம்செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

Share

பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில் பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள நிலையில், பிரான்சில் சில பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பிரான்ஸ் அரசு, புதிய புலம்பெயர்தல் சட்டம் ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த சட்டம், விரும்பத்தகாதவர்கள் என கருதப்படும் வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதை எளிதாக்குகிறது, வெளிநாட்டவர்கள் அரசு உதவிகளை பெறுவதையும், பிரான்ஸ் நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதையும் அச்சட்டம் கடினமாக்குகிறது.

இந்நிலையில், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேற்கு பிரான்சில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். Brittany பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிசார் மீதும் கடைகள் மீதும் கற்களை வீசித் தாக்கியுள்ளார்கள். கண்ணாடிக் கதவு ஜன்னல்கள் உடைந்துள்ளன, குப்பைத்தொட்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.

அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், அந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ள சில விடயங்களுக்கு நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...