tamilnaadi 87 scaled
இலங்கைசெய்திகள்

போதைப்பொருட்களை அழிக்க புதிய திட்டம்

Share

போதைப்பொருட்களை அழிக்க புதிய திட்டம்

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மார்ச் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வனாத்தவில்லுவ பிரதேசத்தில் போதைப்பொருள் அழிக்கும் வசதியுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கைகள் இன்று (27.1.2024) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது 159 கிராம் ஹெரோயின் 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 8 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...