tamilnic 5 scaled
உலகம்செய்திகள்

காசாவில் சிதைந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம்

Share

காசாவில் சிதைந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம்

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 75 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிணைக் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் விருப்பம் தெரிவித்து இருந்த நிலையில், அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் 800 பேர் வரை தங்க வைக்கப்பட்டு இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இதன்படி இது தொடர்பாக ஐ.நா அதிகாரி தாமஸ் வைட் கருத்து தெரிவித்த போது,

இன்று மதியம் கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஐ.நா பயிற்சி மையத்தை இரண்டு டேங்கர்கள் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உலக சுகாதார மையமும், ஐக்கிய நாடுகளின் UNRWA அமைப்பும் பயிற்சி மையத்தை அடைய முயற்சிக்கின்றன என டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...