tamilni 360 scaled
உலகம்செய்திகள்

அயோத்தி கோயிலில் நிகழ்ந்த அதிசயம் – வட்டமிட்ட கருடன்

Share

அயோத்தி கோயிலில் நிகழ்ந்த அதிசயம் – வட்டமிட்ட கருடன்

அயோத்தியில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை மதியம் 1.28 மணியளவில், 51 அங்குலம் ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

நேற்று ராமர் அவதரித்த நேரமான அபிஜித் முகூர்த்த வேளையில், சூரியன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில் அயோத்தி கோயிலை கருடன் சுற்றி வந்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஷ்ணு பகவானின் வாகனமாக கருடன் விளங்குகிறார். விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமருக்காக தான் அக்கோயிலும் கட்டப்பட்டுள்ளது.

அப்போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் கடவுளின் ஆசிகிடைத்திருக்கிறது எனவும் கடவுள் ராமர் அங்குதான் இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...