tamilni 310 scaled
இலங்கைசெய்திகள்

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

Share

ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இலங்கைக்கு ஆபத்து

பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் ஏற்றுமதியின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மேற்கு ஆசியப் பிராந்தியம் உள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த வருடம் இந்த நாட்டில் ஏற்பட்ட பெரிய வெங்காய நெருக்கடியை அடுத்து பாகிஸ்தானில் இருந்து அதிகளவு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரான் இலங்கை தேயிலையின் பிரதான ஏற்றுமதியாளராக உள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் அரசியல் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்தார்.

ஏற்றுமதி இறக்குமதிக்கு கடும் நெருக்கடி நிலையை இலங்கை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நெருக்கடி நிலைமைக்கு பதிலளிப்பதில் இலங்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...