tamilni 294 scaled
இலங்கைசெய்திகள்

குழந்தைகளிடையே வேகமாக பரவும் தொழுநோய்

Share

குழந்தைகளிடையே பரவும் தொழுநோயை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடையே தொழு நோயை இல்லாதொழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் சராசரியாக 1,500 முதல் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 10% பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே தொழுநோயை ஒழிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தையால் தொழுநோய் தொற்றாது எனவும், குழந்தைகளுக்கு ஏற்படும் தொழுநோயில் 90% பெரியவர்களால் தொற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 1,550 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 173 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 315 ஆகும். மேலும், கம்பஹா மாவட்டத்தில் 168 தொழுநோயாளிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 151 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 116 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...