tamilni 244 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவில் களமிறங்கும் வேட்பாளர் : மகிந்த அறிவிப்பு

Share

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம்.

அரசியல் ரீதியில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் திரிபுப்படுத்தப்படுகின்றன.எமது அரசாங்கம் வரி குறைத்ததால் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது என குறிப்பிடப்படுகிறது. தற்போது வரி அதிகரிப்பினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். பிரிந்து சென்றவர்கள் எம்முடன் தாராளமாக ஒன்றிணையலாம். அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...

prison jail cell 2
அரசியல்இலங்கைசெய்திகள்

காலி சிறைச்சாலையில் இருந்து தப்ப முயன்ற கைதிகள்: அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் பரபரப்பு!

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் இன்று தப்பியோட முயன்ற நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள்...