R 13 scaled
உலகம்செய்திகள்

நிபந்தனைக்கு பணிந்த முன்னாள் மேயர்..சிறையிலிருந்து விடுவித்த ரஷ்யா

Share

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மேயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதான குற்றவாளிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருகிறது.

அவர்களில் பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட ரஷ்யா அனுப்பி வைக்கிறது.

இதற்கிடையில், ரஷ்யாவின் Vladivostok நகர முன்னாள் மேயரான Oleg Gumenyuk லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் கடந்த ஆண்டு சுமார் 4,32,000 டொலர்கள் லஞ்சம் பெற்றதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், Oleg Gumenyuk உக்ரைனில் சண்டையிட ஒப்புக்கொண்டதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவரது வழக்கறிஞர் ரஷ்ய செய்தி நிறுவனமான Kommersant தெரிவித்தார்.

Oleg Gumenyuk ரஷ்யாவின் இராணுவத்துடன் சண்டையிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு நகரமான Vladivostok நகரின் மேயராக 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Oleg Gumenyuk பணியாற்றினார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...