tamilnih 51 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வடக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

Share

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக இலங்கைக்கான, நோர்வேயின் முன்னாள் சமாதானப் பேச்சு ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப்பதிவு ஒன்றில், போரினால் வட இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இப்போது வடக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கும், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பச்சை அம்மோனியாவுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

சொல்ஹெய்ம் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக செயற்படும் நிலையிலேயே இந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கான அற்புதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மிக ஆழமற்ற கடல் காற்றுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் சூரிய சக்திக்கும் பொருத்தமான இடமாக இலங்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தராக செயற்படுவதாக கூறப்படும் கூற்றை சொல்ஹெய்ம் நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...