tamilnih 28 scaled
இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக கொழும்பில் போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

Share

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் மூன்றாவது நாள் தொடர் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கை மின்சார சபையின் வளங்களை தனியார் மயப்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆயிரக்கணக்கிற்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தினை தற்போது மேற்கொண்டு வருவதுடன், நாடளாவிய ரீதியில் இருந்து மேலும் பலர் வருகைத் தந்த வண்ணம் உள்ளதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் டில்ஷான் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவான ஊழியர்கள் தொடருந்துகளில் வருகைத் தந்து போராட்டக் களத்தை நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Gallery

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...