tamilni 92 scaled
இலங்கைசெய்திகள்

இத்தாலி அனுப்புவதாக நூற்றுக்கணக்கான இலங்கையர்களை ஏமாற்றியவர் கைது

Share

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய போலி வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு, நுவரெலியா மற்றும் ஜா அல பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 100 பேருக்கு இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த சில தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சொகுசு வாகனங்களை பயன்படுத்தி மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட இவர், அவ்வாறே வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி மக்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கரை வருடங்களாக விளக்கமறியலில் இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இவர் கைது செய்யப்பட்ட போது, ​​06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் சொகுசு கார் ஒன்று கட்டுநாயக்க பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...