tamilnih 20 scaled
செய்திகள்விளையாட்டு

வரலாற்றிலேயே மோசமான சாதனையை படைத்த இந்திய அணி

Share

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், அதன் பின்னர் ஒரு ஓட்டங்களையேனும் பெறாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இதன் மூலம், வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் தொடர்ச்சியாக ஆறு விக்கெட்டுக்களை இழந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இந்திய அணி 153/4 என்ற நிலையில் இருந்த போது லுங்கி இங்கிடி வீசிய ஓவரில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.

தொடர்ந்து, காகிசோ ரபாடா வீசிய ஓவரில், விராட் கோஹ்லி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முஹம்மத் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

குறித்த ஆறு விக்கெட்டுக்களும் லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா வீசிய 11 பந்துகளில் சரிந்துள்ளன.

தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அத்துடன், முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...