tamilni 68 scaled
இலங்கைசெய்திகள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸார்

Share

இலங்கையின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படும் 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை கைது செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பூரண மேற்பார்வையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்படவுள்ள பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தென் மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரக்கட்டாவுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களும் அது தொடர்பான ஒலிநாடாக்களும் தற்போது கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்தும் பொலிஸார் ரகசிய விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...