tamilnaadi 1 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க சிறந்த உலகத் தலைவர்

Share

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வல்லரசு நாடுகளின் தலைவர்களை விடவும் சிறந்த தலைவர் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றார்.

நாம் பிளவுபட்டு நின்றால் தான் வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்குள் நுழையும். அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும்.

அப்போது ஜனாதிபதியால் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும். நாம் பிரிந்து நின்றால் நாடு விழும். நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதால் தான் நாம் அவர் பின்னால் நிற்கின்றோம்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் ஆகியோரை விடவும் ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைவர் என நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆம். புடின் 1999 இல்தான் அரசியலுக்கு வந்தார். நாடுகள் பெரிதாக இருக்கலாம், சொத்துக்கள் இருக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், எமது நாட்டுத் தலைவருடன் ஒப்பிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்லும்போது, அவர் ஜனாதிபதி ஆவார் என கூறினோம். மறுநாள் எனக்குப் பைத்தியம் என்றார்கள். நடந்தது என்ன? ஏனெனில் ரணிலின் நகர்வுகள் எமக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....