Rasi palan30 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Share

முகநூலில்(Facebook) பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலையை சேர்ந்த நபரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக திருகோணமலையை சேர்ந்த நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...