R 6
உலகம்செய்திகள்

பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட இந்தியர்கள் பயணித்த விமானம்: விசாரணை துவக்கம்

Share

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா தனியாக விசாரணைகளைத் துவங்கியுள்ளது.

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் நேற்று மும்பை திரும்பியது.

மீதமுள்ளவர்களில் சிலர் ஆட்கடத்தல் தொடர்பில் பிரான்சில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார்கள்.

அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.

அதாவது, இந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், Shashi Kiran Reddy என்னும் நபர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த Shashi Kiran Reddyதான், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நடந்தே நுழைய முயன்று குளிரில் உறைந்து பலியான ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து...

Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...

Sea 1200px 22 05 24 1000x600 1
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் ஆழமான தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல்...