R 6
உலகம்செய்திகள்

பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட இந்தியர்கள் பயணித்த விமானம்: விசாரணை துவக்கம்

Share

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா தனியாக விசாரணைகளைத் துவங்கியுள்ளது.

துபாயிலிருந்து நிகராகுவா நாட்டுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று, ஆட்கடத்தல் நடப்பதாக சந்தேகத்தின் பேரில் பிரான்சில் நிறுத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களாக பிரான்ஸ் அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில், 276 பேருடன் அந்த விமானம் நேற்று மும்பை திரும்பியது.

மீதமுள்ளவர்களில் சிலர் ஆட்கடத்தல் தொடர்பில் பிரான்சில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள், மற்றவர்கள் பிரான்சில் புகலிடம் கோரியுள்ளார்கள்.

அந்த விமானத்தில் பயணித்தவர்கள் அனைவருமே, இந்தியாவிலுள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டே மாநிலைங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆகவே, இரண்டு மாநில பொலிசாரும் அவர்களிடம் தனித்தனியே விசாரணைகளைத் துவக்கியுள்ளார்கள்.

அதாவது, இந்த பயணிகள் அனைவரும் இந்தியாவிலிருந்து துபாய் சென்று, அங்கிருந்து நிகராகுவா நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து அமெரிக்கா மற்றும் கனடாவுக்குச் செல்லும் திட்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பயணத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர், Shashi Kiran Reddy என்னும் நபர் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த Shashi Kiran Reddyதான், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நடந்தே நுழைய முயன்று குளிரில் உறைந்து பலியான ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...