OIP 9
உலகம்செய்திகள்

கனடாவில் கனேடியர் கொல்லப்பட்ட விவகாரம்: கொலை செய்தவர் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Share

கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயம் இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த கனேடியரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டார்.

கனேடியரான நிஜ்ஜர் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஊடகமான The Globe and Mail வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய அந்த இருவரையும் பொலிசார் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா பொலிசாரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...