tamilni 485 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்

Share

மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வறுமை காரணமாக அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக நடந்தே மெக்சிகோ நாட்டிற்கு சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அமெரிக்கா செல்வதாகவும், தினமும் 30 கிலோமீட்டர் தொலைவு நடந்துவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு புலம்பெயர தினமும் சுமார் 8000 பேர் மெக்சிகோ வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க எல்லையை அடைவதற்கு முன் அவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மெக்சிகோ தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதேவேளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி 2023 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 680,000 புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு புலம்பெயர சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...