202238 Freedman Ukraine
உலகம்செய்திகள்

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்ட 241 மக்கள்: இஸ்ரேல் வெளியிட்ட முக்கிய தகவல்

Share

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசாவில் உள்ள ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 382 பொதுமக்கள் இஸ்ரேலிய படையின் தாக்குதலில் காயமடைந்து இருப்பதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேலிய படைகளின் தாக்குதலை தனது மக்களுக்கு எதிரான “கடுமையான குற்றம்” என கண்டித்துள்ளார்.

அமைச்சகத்தின் தகவல்படி, 11 வார மோதலில் இதுவரை பாலஸ்தீனத்தில் 20,915 பேர் கொல்லப்பட்டுள்ளனர், அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்ஸி ஹலேவி, ஹமாஸ் படைகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை பல மாதங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிழமை மட்டும் 100 இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...