tamilnid 19 scaled
இலங்கைசெய்திகள்

பண்டிகை காலத்தில் மற்றுமொரு நெருக்கடி

Share

பண்டிகை காலத்தில் மற்றுமொரு நெருக்கடி

பண்டிகைக் காலத்தில் இனிப்பு வகைகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக இனிப்பு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை, அரிசி, தேங்காய், எண்ணெய் உள்ளிட்ட இனிப்பு வகைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு நத்தார் பண்டிகையின் போது அதிகளவான இனிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு சடுதியாக விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, கொண்டை பலகாரம் 80 ரூபாய்,பயறு பலகாரம் 60 ரூபாய், இனிப்பு முறுக்கு 130 ரூபாய்,கொக்கீஸ் 130 ரூபாய், தேன் குழல் 60 ரூபாய், கேக் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பண்டிகைக் காலங்களில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...