tamilni 427 scaled
இலங்கைசெய்திகள்

மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Share

மன்னிப்புக்கோரிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு க்கோரியுள்ளது.

இந்த காலகட்டத்தில், இரண்டு ஏர்பஸ் ஏ330 விமானங்கள் பல நாட்கள் சேவையில் ஈடுபடாமையால் விமான நிறுவனம் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

உலகளாவிய விநியோக பற்றாக்குறை மற்றும் பாரிஸில் டயர் வெடித்த சம்பவம் என்பன ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சவால்களாக அமைந்துள்ளன.

அதே நேரத்தில், இரண்டு உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை தவிர்க்க முடியாத விமான இரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இந்த நிலையில், பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுவதோடு அண்மையில் குத்தகைக்கு எடுக்கப்பட்ட யு320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இரண்டு யு320 விமானங்கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட இயந்திரங்களுடன் சேவைக்குத் திரும்ப உள்ளதோடு ஏர் பெல்ஜியத்தின் காப்புப்பிரதி யு330 இந்த வார இறுதியில் வரவிருக்கிறது.

அத்துடன், சேவைகளில் ஈடுபடாமல் இருந்த இரண்டு விமானங்களும் மீண்டும் சேவைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...